Responsive image

பெரிய திருமொழி.744

பாசுர எண்: 1691

பாசுரம்
கயங்கொள் புண்தலைக் களிறுந்து
வெந்திறல் கழல்மன்னர் பெரும்போரில்,
மயஙகவெண்சங்கம் வாய்வைத்த
மைந்தனும் வந்திலன், மறிகடல்நீர்
தயங்கு வெண்திரைத் திவலைநுண்
பனியென்னும் தழல்முகந் திளமுலைமேல்,
இயங்கு மாருதம் விலங்கிலென்
ஆவியை எனக்கெனப் பெறலாமே. 8.5.4

பெரிய திருமொழி.745

பாசுர எண்: 1692

பாசுரம்
ஏழு மாமரம் துளைபடச்
சிலைவளைத் திலங்கையை மலங்குவித்த
ஆழி யான்,நமக் கருளிய
அருளொடும் பகலெல்லை கழிகின்றதால்,
தோழி. நாமிதற் கென்செய்தும்
துணையில்லை சுடர்படு முதுநீரில்,
ஆழ ஆழ்கின்ற ஆவியை
அடுவதோர் அந்திவந் தடைகின்றதே. 8.5.5

பெரிய திருமொழி.746

பாசுர எண்: 1693

பாசுரம்
முரியும் வெண்டிரை முதுகயம்
தீப்பட முழங்கழ லெரியம்பின்,
வரிகொள் வெஞ்சிலை வளைவித்த
மைந்தனும் வந்திலன் என்செய்கேன்,
எரியும் வெங்கதிர் துயின்றது
பாவியேன் இணைநெடுங் கண்துயிலா,
கரிய நாழிகை ஊ ழியில்
பெரியன கழியுமா றறியேனே. 8.5.6

பெரிய திருமொழி.747

பாசுர எண்: 1694

பாசுரம்
கலங்க மாக்கடல் கடைந்தடைத்
திலங்கையர் கோனது வரையாகம்,
மலங்க வெஞ்சமத் தடுசரம்
துரந்தவெம் மடிகளும் வாரானால்,
இலங்கு வெங்கதி ரிளமதி
யதனொடும் விடைமணி யடும்,ஆயன்
விலங்கல் வேயின தோசையு
மாயினி விளைவதொன் றறியேனே. 8.5.7

பெரிய திருமொழி.748

பாசுர எண்: 1695

பாசுரம்
முழுதிவ் வையகம் முறைகெட
மறைதலும் முனிவனும் முனிவெய்தி,
மழுவி னால்மன்னர் ஆருயிர்
வவ்விய மைந்தனும் வாரானால்,
ஒழுகு நுண்பனிக் கொடுங்கிய
பேடையை யடங்கவஞ் சிறைகோலி,
தழுவு நள்ளிருள் தனிமையிற்
கடியதோர் கொடுவினை யறியேனே. 8.5.8

பெரிய திருமொழி.749

பாசுர எண்: 1696

பாசுரம்
கனஞ்செய் மாமதிள் கணபுரத்
தவனொடும் கனவினி லவன்தந்த,
மனஞ்செ யின்பம்வந் துள்புக
வெள்கியென் வளைநெக இருந்தேனை,
சினஞ்செய் மால்விடைச் சிறுமணி
ஓசையென் சிந்தையைச் சிந்துவிக்கும்,
அனந்த லன்றிலின் அரிகுரல்
பாவியே னாவியை யடுகின்றதே. 8.5.9

பெரிய திருமொழி.750

பாசுர எண்: 1697

பாசுரம்
வார்கொள் மென்முலை மடந்தையர்
தடங்கடல் வண்ணனைத் தாள்நயந்து,
ஆர்வத் தாலவர் புலம்பிய
புலம்பலை அறிந்துமுன் உரைசெய்த,
கார்கொள் பைம்பொழில் மங்கையர்
காவலன் கலிகன்றி யொலிவல்லார்,
ஏர்கொள் வைகுந்த மாநகர்
புக்கிமை யவரொடும் கூடுவரே. (2) 8.5.10

பெரிய திருமொழி.751

பாசுர எண்: 1698

பாசுரம்
தொண்டீர். உய்யும் வகைகண்டேன்
துளங்கா அரக்கர் துளங்க முன்
திண்டோள் நிமிரச் சிலைவளையச்
சிறிதே முனிந்த திருமார்பன்,
வண்டார் கூந்தல் மலர்மங்கை
வடிக்கண் மடந்தை மாநோக்கம்
கண்டாள், கண்டு கொண்டுகந்த
கண்ண புரம்நாம் தொழுதுமே. (2) 8.6.1

பெரிய திருமொழி.752

பாசுர எண்: 1699

பாசுரம்
பொருந்தா அரக்கர் வெஞ்சமத்துப்
பொன்ற அன்று புள்ளூர்ந்து,
பெருந்தோள் மாலி தலைபுரளப்
பேர்ந்த அரக்கர் தென்னிலங்கை,
இருந்தார் தம்மை யுடன்கொண்டங்
கெழிலார் பிலத்துப் புக்கொளிப்ப,
கருந்தாள் சிலைகைக் கொண்டானூர்
கண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.2

பெரிய திருமொழி.753

பாசுர எண்: 1700

பாசுரம்
வல்லி யிடையாள் பொருட்டாக
மதிள்நீ ரிலங்கை யார்கோவை,
அல்லல் செய்து வெஞ்சமத்துள்
ஆற்றல் மிகுந்த ஆற்றலான்,
வல்லாள் அரக்கர் குலப்பாவை
வாட முனிதன் வேள்வியை,
கல்விச் சிலையால் காத்தானூர்
கண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.3

Summary

For the sake of the creeper-like tender waisted Lady Sitamma; He did wield a bow and burn the city of Lakna with arrow to dust He did stand guard over sage’s Viswamitra sacrifice! He destroyed Rakshasi Tataka; -kannapuram, O, let us worship!

Enter a number between 1 and 4000.