ஆண்டாள்
நாச்சியார் திருமொழி.131
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 634
பாசுரம்
உள்ளே யுருகி நைவேனை
உளளோ இலளோ வென்னாத,
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக்
கோவர்த் தனனைக் கண்டக்கால்,
கொள்ளும் பயனொன் றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட் டவன்மார்வில்
எறிந்தென் அழலை தீர்வேனே. 8
நாச்சியார் திருமொழி.132
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 635
பாசுரம்
கொம்மை முலைக ளிடர்தீரக்
கோவிந் தற்கோர் குற்றேவல்,
இம்மைப் பிறவி செய்யாதே
இனிப்போய்ச் செய்யும் தவந்தானென்,
செம்மை யுடைய திருமார்வில்
சேர்த்தா னேலும் ஒருஞான்று,
மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி
விடைதான் தருமேல் மிகநன்றே. 9
Summary
If I cannot, in this life, serve my Govinda and satisfy my swollen breasts, what great purpose awaits me in the life hereafter? Good if he will brace me to his beautiful chest now. Or else let him face and answer me one day.
நாச்சியார் திருமொழி.133
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 636
பாசுரம்
அல்லல் விளைத்த பெருமானை
ஆயர் பாடிக் கணிவிளக்கை,
வில்லி புதுவை நகர்நம்பி
விட்டு சித்தன் வியன்கோதை,
வில்லைத் தொலைத்த புருவத்தாள்
வேட்கை யுற்று மிகவிரும்பும்,
சொல்லைத் துதிக்க வல்லார்கள்
துன்பக் கடளுள் துவளாரே. 10
Summary
These words of love by Goda of bow-like eyebrows, the wonderful daughter of Villiputtur’s Lord Vishnuchitta, praise the tormenting Lord, beacon of the cowherd clan. Those who sing it with gusto will escape the ocean of misery.
நாச்சியார் திருமொழி.134
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 637
பாசுரம்
பட்டி மேய்ந்தோர் காரேறு
பலதே வற்கோர் கீழ்க்கன்றாய்,
இட்டீ றிட்டு விளையாடி
இங்கே போதக் கண்டீரே?-
இட்ட மான பசுக்களை
இனிது மறித்து நீரூட்டி,
விட்டுக் கொண்டு விளையாட
விருந்தா வனத்தே கண்டோ மே. 1
Summary
“A black bull calf strayed away like an underling of Baladeva. Did you see him go this way?” “A cowherd lad with beautiful cows was playing and showing them how to drink. We saw such a one in Brindavana”.
நாச்சியார் திருமொழி.135
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 638
பாசுரம்
அனுங்க வென்னைப் பிரிவுசெய்
தாயர் பாடி கவர்ந்துண்ணும்,
குணுங்கு நாறிக் குட்டேற்றைக்
கோவர்த் தனனைக் கண்டீரே?-
கணங்க ளோடு மின்மேகம்
கலந்தாற் போல, வனமாலை
மினுங்க நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோ மே. 2
Summary
“Leaving me forlorn, a youthful butter-stench bull went raiding into Ayppadi. Did you see this Govardhana lad?” “With his Vanamala shining on his dark frame like a lightning over clouds, we saw him playing with his gang in Brindavana”.
நாச்சியார் திருமொழி.136
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 639
பாசுரம்
மாலாய்ப் பிரந்த நம்பியை
மாலே செய்யும் மணாளனை,
ஏலாப் பொய்க ளுரைப்பானை
இங்கே போதக் கண்டீரே?-
மேலால் பரந்த வெயில்காப்பான்
வினதை சிறுவன் சிறகென்னும்,
மேலாப் பின்கீழ் வருவானை
விருந்தா வனத்தே கண்டோ மே. 3
Summary
“The Lord is a lover, nay; love itself born as a bridegroom. Did you see the inept liar go this way?” “Under the wings of Garuda, like a canopy shielding him from the Sun, we saw him going in Brindavana.
நாச்சியார் திருமொழி.137
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 640
பாசுரம்
கார்த்தண் கமலக் கண்ணென்னும்
நெடுங்கயி றுபடுத் தி,என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும்
ஈசன் றன்னைக் கண்டீரே?-
போர்த்த முத்தின் குப்பாயப்
புகர்மால் யானைக் கன்றேபோல்,
வேர்த்து நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோ மே. 4
Summary
“The Lord has lotus eyes that lead me by a leash. Did you see him go playing this way?” “Like a chubby elephant-calf decked in a blanket of pearls, we saw him sweating and playing in Brindavana”.
நாச்சியார் திருமொழி.138
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 641
பாசுரம்
மாத வன்என் மணியினை
வலையில் பிழைத்த பன்றிபோல்,
ஏது மொன்றும் கொளத்தாரா
ஈசன் றன்னைக் கண்டீரே?-
பீதக வாடை யுடைதாழப்
பெருங்கார் மேகக் கன்றேபோல்,
வீதி யார வருவானை
விருந்தா வனத்தே கண்டோ மே. (2) 5
Summary
“Utterly invincible as a boar-escaped-from-the-dragnet, did you see my black-gem Lord Madavan?” “Like temple’s stud-bull-calf taken around the precincts, his yellow robes all hanging, we saw him in Brindavana”.
நாச்சியார் திருமொழி.139
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 642
பாசுரம்
தரும மறியாக் குறும்பனைத்
தங்கைச் சார்ங்க மதுவேபோல்,
புருவ வட்ட மழகிய
பொருத்த மிலியைக் கண்டீரே?-
உருவு கரிதாய் முகம்செய்தாய்
உதயப் பருப்ப தத்தின்மேல்,
விரியும் கதிரே போல்வானை
விருந்தா வனத்தே கண்டோ மே. 6
Summary
“The unruly rogue has curved eyebrows, like the Sarnga bow he wields. Did you see the Lord of inconsistencies?” “His body dark, his face red, he looked like the rising Sun over the Eastern mount. We saw him then in Brindavana”.
நாச்சியார் திருமொழி.140
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 643
பாசுரம்
பொருத்த முடைய நம்பியைப்
புறம்போ லுள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்றஅக்
கருமா முகிலைக் கண்டீரே?-
அருத்தித் தாரா கணங்களால்
ஆரப் பெருகு வானம்போல்,
விருத்தம் பெரிதாய் வருவானை
விருந்தா வனத்தே கண்டோ மே. 7
Summary
“Through and through dark inside and out like a cloud, did you see the Lord whom the mind cannot grasp?” “Like a myriad beautiful stars cluttering the dark wide sky, we saw him with his team coming in Brindavana”.