திருமங்கை_ஆழ்வார்
பெரிய திருமொழி.381
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1328
பாசுரம்
நும்மைத் தொழுதோம் நுந்தம் பணிசெய் திருக்கும் நும்மடியோம்,
இம்மைக் கின்பம் பெற்றோ மெந்தாய் இந்த ளூரீரே,
எம்மைக் கடிதாக் கரும மருளி ஆவா வென்றிரங்க ி,
நம்மை யொருகால் காட்டி நடந்தால் நாங்க ளுய்யோமே? (4.9.1)
Summary
O Lord of indalur! We worship you; We are your devotees, at the service of your lotus feet. We are happy and well, if only you would wake up to our needs quickly and inquire of us with concern, if only you would reveal yourself and walk a few steps before us, would we not find elevation of spirit?
பெரிய திருமொழி.382
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1329
பாசுரம்
சிந்தை தன்னுள் நீங்கா திருந்த திருவே மருவினிய
மைந்தா, அந்த ணாலி மாலே. சோலை மழகளிறே
நந்தா விளக்கின் சுடரே. நறையூர் நின்ற நம்பீ, என்
எந்தாய். இந்த ளூராய். அடியேற் கிறையு மிரங்காயே. (4.9.2)
Summary
O Lord of indolur! O Precious one remaining in my heart! O Prince sweet to approach! O Lord-adorable of Tiruvalil O Elephant roaming in Tirumalirumsolai! O Lamp-eternal of Manimadakkoyil! O Lord standing in Naraiyur! My own sweet Lord! See, you have no pity for me.
பெரிய திருமொழி.383
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1330
பாசுரம்
பேசு கின்ற திதுவே வைய மீரடி யாலளந்த,
மூசி வண்டு முரலும கண்ணி முடியீர், உம்மைக்காணும்
ஆசை யென்னும் கடலில் வீழ்ந்திங் கயர்ந்தோம், அயலாரும்
ஏசு கின்ற திதுவே காணும் இந்த ளூரீரே. (4.9.3)
பெரிய திருமொழி.384
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1331
பாசுரம்
ஆசை வழுவா தேத்து எமக்கிங் கிழுக்காய்த்து, அடியோர்க்குத்
தேச மறிய வுமக்கே யாளாய்த் திரிகின் றோமுக்கு,
காசி னொளியில் திகழும் வண்ணம் காட்டீர், எம்பெருமான்
வாசி வல்லீர் இந்த ளூரீர் வாழ்ந்தே போம்நீரே. (4.9.4)
பெரிய திருமொழி.385
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1332
பாசுரம்
தீயெம் பெருமான் நீரெம் பெருமான் திசையு மிருநிலனு
மாய், எம் பெருமா னாகி நின்றா லடியோம் காணோமால்,
தாயெம் பெருமான் தந்தை தந்தை யாவீர், அடியேமுக்-
கேயெம் பெருமா னல்லீ ரோநீர் இந்த ளூரீரே. (4.9.5)
பெரிய திருமொழி.386
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1333
பாசுரம்
சொல்லா தொழிய கில்லேன் அறிந்த சொல்லில், நும்மடியார்,
எல்லா ரோடு மொக்க வெண்ணி யிருந்தீ ரடியேனை,
நல்ல ரறிவீர் தீயா ரறிவீர் நமக்கிவ் வுலகத்தில்,
எல்லா மறிவீ ரீதே யறியீர் இந்த ளூரீரே. (4.9.6)
Summary
O Lord of indolur I cannot refrain from saying it, let me say what I fee; you only think of me as yet another devotee, you know who is good and who is bad, you know everything about this world. You only don’t know how to shower your grace on me.
பெரிய திருமொழி.387
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1334
பாசுரம்
மாட்டீ ரானீர் பணிநீர் கொள்ள எம்மைப் பணியறியா
விட்டீர், இதனை வேறே சொன்னோம் இந்த ளூரீரே,
காட்டீ ரானீர் நுந்த மடிக்கள் காட்டில் உமக்கிந்த,
நாட்டே வந்து தொண்டரான நாங்க ளுய்யோமே (4.9.7)
Summary
O Lord of Indalur! You have rejected our service, you have denied us the pelasure, we say this openly, you have refused to show us your feet. If only you did, wouldn’t all devotees in this wide world find elevation of spirit?
பெரிய திருமொழி.388
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1335
பாசுரம்
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற,
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ண மெண்ணுங்கால்,
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையுந் திருமேனி,
இன்ன வண்ண மென்று காட்டீர் இந்த ளூரீரே. (4.9.8)
Summary
O Lord of Indolur! In the beginning you are white, in the end you are black, The colours in-between are red and yellow. Alas, you do not let us see what colour you are now.
பெரிய திருமொழி.389
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1336
பாசுரம்
எந்தை தந்தை தம்மா னென்றென் றெமெரே றெமரெ ழேளவும்,
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்,
சிந்தை தன்னுள் முந்தி நிற்றிர் சிறிதும் திருமேனி,
இந்த வண்ண மென்று காட்டீர் இந்த ளூரீரே (4.9.9)
Summary
O Lord of indalur! My father, and his fathers before him, for seven generations, have been faithfully serving you as our only master. Alas, you do not inquire of us; you neither stay in our thoughts, nor let us see your body’s hue even slightly.
பெரிய திருமொழி.390
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1337
பாசுரம்
ஏரார் பொழில்சூழ் இந்த ளூரி லெந்தை பெருமானை,
காரார் புறவில் மங்கை வேந்தன் கலிய னொலிசெய்த,
சீரா ரின்சொல் மாலை கற்றுத் திரிவா ருலகத்து,
ஆரா ரவரே யமரர்க் கென்று மமர ராவாரே (4.9.10)
Summary
This garland of sweet Tamil songs, by Mangai king kaliyan is on the Lord of indolur surrounded by fertile groves. Those who master it will be sweet ambrosia to devotees, and rule the gods as their god.