நம்மாழ்வார்
திருவாய்மொழி.917
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3707
பாசுரம்
கண்ணே யுனைக்காணக் கருதி,என் னெஞ்சம்
எண்ணே கொண்ட சிந்தையதாய் நின்றியம்பும்,
விண்ணோர் முனிவர்க் கென்றும்காண் பரியாயை,
நண்ணா தொழியே னென்றுநான் அழைப்பனே. 9.4.2
Summary
Lord, desirous of seeing you, my heart speaks countless thoughts, I call, “I shall not let you go” Alas, he evades even the gods and sages!
திருவாய்மொழி.918
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3708
பாசுரம்
அழைக்கின்ற வடிநாயேன் நாய்கூழை வாலால்,
குழைக்கின் றதுபோல் என்னுள்ளம் குழையும்,
மழைக்கன்று குன்றமெடுத்த தாநிரை காத்தாய்,
பிழைக்கின்ற தருளென்று பேதுறு வேனே. 9.4.3
Summary
Like a lowly dog that wags, its fall, I call, with my heart melting. Then you protected herds with a hill I fear your grace has missed me
திருவாய்மொழி.919
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3709
பாசுரம்
உறுவதிது வென்றுனக் காட்பட்டு, நின்கண்
பெறுவ தெதுகொலென்று பேதையேன் நெஞ்சம்,
மறுகல்செய்யும் வானவர் தானவர்க் கென்றும்,
அறிவ தரிய அரியாய அம்மானே. 9.4.4
Summary
Lord confounding the gods and Asuras, you came as Narasimhal Fittingly I have surrendered myself, but fear for what lies ahead
திருவாய்மொழி.920
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3710
பாசுரம்
அரியாய அம்மானை அமரர் பிரானை,
பெரியானைப் பிரமனை முன்படைத் தானை,
வரிவாள் அரவின் அணைப்பள்ளி கொள்கின்ற,
கரியான் கழல்காணக் கருதும் கருத்தே. 9.4.5
Summary
The Lord of gods came as a lion. He made Brahma too. He reclines on a hooded serpent, My heart seeks his feet
திருவாய்மொழி.921
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3711
பாசுரம்
கருத்தே யுனைக்காணக் கருதி,என் னெஞ்சத்
திருத்தாக இருத்தினேன் தேவர்கட் கெல்லாம்
விருத்தா, விளங்கும் சுடர்ச்சோதி யுயரத்
தொருத்தா, உனையுள்ளும் என்னுள்ளம் உகந்தே. 9.4.6
Summary
Longing to see you, I contemplate your form. Peerless Lord of Vaikunta! My heart rejoices in you
திருவாய்மொழி.922
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3712
பாசுரம்
உகந்தே யுனையுள்ளு மென்னுள்ளத்து, அகம்பால்
அகந்தான் அமர்ந்தே யிடங்கொண்ட அமலா,
மிகுந்தான வன்மார் வகலம் இருகூறா
நகந்தாய், நரசிங் கமதாய வுருவே. 9.4.7
Summary
O Lord who came as Narasimha and tore apart the wide chest, You live in the core of my hear. My heart rejoices in you
திருவாய்மொழி.923
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3713
பாசுரம்
உருவா கியாஅறு சமயங்கட் கெல்லாம்,
பொருவாகி நின்றான் அவனெல்லாப் பொருட்கும்,
அருவாகிய ஆதியைத் தேவர்கட் கெல்லாம்,
கருவாகிய கண்ணனைக் கண்டுகொண் டேனே. 9.4.8
Summary
I have seen my Krishna Lord, -he stands beyond the six schools. The subtle cause of all the world, he is the womb of even the gods!
திருவாய்மொழி.924
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3714
பாசுரம்
கண்டுகொண் டேனேகண் ணிணையாரக் களித்து,
பண்டை வினையாயின பற்றோ டறுத்து,
தொண்டர்க் கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்,
அண்டத் தமரர் பெருமான். அடியேனே. 9.4.9
Summary
I see the Lord before myself, My heart ha sung his songs delightful to devotees! My Karmic bonds are broken
திருவாய்மொழி.925
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3715
பாசுரம்
அடியா னிவனென் றெனக்கா ரருள்செய்யும்
நெடியானை, நிறைபுகழ் அஞ்சிறைப் புள்ளின்
கொடியானை, குன்றாமல் உலகம் அளந்த
அடியானை, அடைந்தடி யேனுய்ந்த வாறே. 9.4.10
Summary
The Lord who bears the Garuda banner keeps me as his servant. His feet once strode the Earth and all, what a wonder, I have found him!
திருவாய்மொழி.926
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3716
பாசுரம்
ஆற மதயானை அடர்த்தவன் றன்னை,
சேறார் வயல்தென் குருகூர்ச் சடகோபன்,
நூறே சொன்னவோ ராயிரத்து ளிப்பத்தும்,
ஏறே தரும்வா னவர்தமின் னுயிர்க்கே. (2) 9.4.11
Summary
This decad of the thousand songs by kurugur satakopan of tertile fields sung for the Lord who killed the rutted elephant grants the Lord himsef, -the soul of the gods