நம்மாழ்வார்
திருவாய்மொழி.957
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3747
பாசுரம்
பூந்துழாய் முடியார்க்குப்
பொன்னாழி கையார்க்கு,
ஏந்துநீ ரிளங்குருகே.
திருமூழிக் களத்தார்க்கு,
ஏந்துபூண் முலைப்பயந்தென்
இணைமலர்க்கண் ணீர்ததும்ப,
தாம்தம்மைக் கொண்டகல்தல்
தகவன்றென் றுரையீரே. 9.7.9
Summary
O Tender water-egret! The Lord wears a Tulasi crown and wields a golden discus in Tirumulikkalam, My jewel-worthy breasts have paled, tears flood my lotus eyes. Tell him that his keeping away from me is just not right
திருவாய்மொழி.958
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3748
பாசுரம்
தகவன்றென் றுரையீர்கள்
தடம்புனல்வாய் இரைதேர்ந்து,
மிகவின்பம் படமேவும்
மென்னடைய அன்னங்காள்,
மிகமேனி மெலிவெய்தி
மேகலையும் ஈடழிந்து,என்
அகமேனி யொழியாமே
திருமூழிக் களத்தார்க்கே. 9.7.10
Summary
O Soft-gaited swan-pair feeding my lake! You enjoy amorous company; my Lord is in Tirumulikkalam. My body has become thin, my waistband has slipped, my life is departing. Go tell him, this is not right
திருவாய்மொழி.959
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3749
பாசுரம்
ஒழிவின்றித் திருமூழிக்
களத்துறையும் ஒண்சுடரை,
ஒழிவில்லா அணிமழலைக்
கிளிமொழியாள் அலற்றியசொல்,
வழுவில்லா வண்குருகூர்ச்
சடகோபன் வாய்ந்துரைத்த,
அழிவில்லா ஆயிரத்திப்
பத்தும்நோய் அறுக்குமே. (2) 9.7.11
Summary
This decad of the thousand songs by prosperous kurugur’s Satakopan praising with sweet parrot-like words the radiant Lord of Tirumulikkalam, will cure sickness
திருவாய்மொழி.960
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3750
பாசுரம்
அறுக்கும் வினையா யின ஆகத்தவனை,
நிறுத்தம் மனத்தொன் றியசிந் தையினார்க்கு,
வெறித்தண் மலர்சோ லைகள்சுழ் திருநாவாய்,
குறுக்கும் வகையுண்டு கொலொகொடி யேற்கே? (2) 9.8.1
Summary
For those who keep him in their hearts, and contemplate on him, the Lord in Tirunavai effaces karmas. Alas! How can I reach him?
திருவாய்மொழி.961
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3751
பாசுரம்
கொடியே ரிடைக்கோ கனகத் தவள்கேள்வன்,
வடிவேல் தடங்கண் மடப்பின்னை மணாளன்,
நெடியா னுறைசோ லைகள்சூழ் திருநாவாய்,
அடியேன் அணுகப் பெறு நாள் எவைகொலொ. 9.8.2
Summary
The Lord in Tirunavai is spouse of lotus-dame Lakshmi, and Vel-eyed slender Nappinnai. Oh! When will I attain him?
திருவாய்மொழி.962
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3752
பாசுரம்
எவைகொல் அணுகப் பெறுநாள்? என் றெப்போதும்,
கவையில் மனமின்றிக் கண்ணீர்கள் கலுழ்வன்,
நவையில் திருநாரணன்fசேர் திருநாவாய்,,
அவையுள் புகலாவ தோர்நாள் அறியேனே. 9.8.3
Summary
I weep with thoughts of nothing except when I will reach him in Tirunavai where he resides in good company perfectly
திருவாய்மொழி.963
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3753
பாசுரம்
நாளெல் அறியேன் எனக்குள் ளன,நானும்
மீளா அடிமைப் பணிசெய்யப் புகுந்தேன்,
நீளார் மலர்சோ லைகள்சுழ் திருநாவாய்,
வாளேய் தடங்கண் மடப்பின்னை மணாளா. 9.8.4
Summary
O Lord of Vel-eyed Nappinnai in Tirunavai amid groves! I know not how long I must stay here doing deeds of no return
திருவாய்மொழி.964
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3754
பாசுரம்
மணாளன் மலர்மங் கைக்கும்மண் மடந்தைக்கும்,
கண்ணாளன் உலகத் துயிர்தேவர் கட்கெல்லாம்,
விண்ணாளன் விரும்பி யுறையும் திருநாவாய்,
கண்ணாரக் களிக்கின்ற திங்கென்று கொல்கண்டே? 9.8.5
Summary
The spouse of lotus-dame and Earth Dame, door as eyes to the gods and men has made his home in Tirunavai. O, when will these eyes feast on him?
திருவாய்மொழி.965
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3755
பாசுரம்
கண்டே களிக்கின்ற திங்கென்று கொல்கண்கள்,
தொண்டே யுனக்கா யொழிந்தான் துரிசின்றி,
வண்டார் மலர்சோ லைகள்சுழ் திருநாவாய்,
கொண்டே யுறைகின்ற எங்கோ வலர்கோவே. 9.8.6
Summary
My Lord! King of the cowherd-clan, now living inTirunavali! O When will my eyes see you here and rejoice in pure love?
திருவாய்மொழி.966
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3756
பாசுரம்
கோவா கியமா வலியை நிலங்கொண்டாய்,
தேவா சுரம்செற் றவனே. திருமாலே,
நாவா யுறைகின்ற என்நா ரணநம்பீ,
ஆவா அடியா னிவன் என் றருளாயே. 9.8.7
Summary
You took the Earth, from Bali king. O Tirumal, Lord of the gods, my friend living in Tirunavai! Take me as your servant