நம்மாழ்வார்
திருவாய்மொழி.97
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2887
பாசுரம்
கமலக்கண்ணனென்கண்ணினுள்ளான்காண்பன் அவன்கண்களாலே,
அமலங்க ளாக விழிக்கும் ஐம்புல னுமவன்மூர்த்தி,
கமலத்தயன்நம்பிதன்னைக் கண்ணுதலானொடும்தோற்றி
அமலத்தெய்வத்தோடுலகம் ஆக்கியென்நெற்றியுளானே. 1.9.9
Summary
He created the lotus-born Brahma and the forehead-eyed Siva. He created the pure gods and all their worlds. I see the lotus-eyed Lord in my eyes, he too sees me clearly. He is in my forehead.
திருவாய்மொழி.98
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2888
பாசுரம்
நெற்றியுள்நின்றென்னையாளும் நிரைமலர்ப்பாதங்கள்சூடி,
கற்றைத்துழாய்முடிக்கோலக் கண்ணபிரானைத்தொழுவார்,
ஒற்றைப்பிறையணிந்தானும் நான்முகனும் இந்திரனும்,
மற்றையமரருமெல்லாம் வந்தெனதுச்சியுளானே. 1.9.10
Summary
The crescent-crowned Siva, the four-faced Brahma, Indra and all the other gods place their heads of his lotus feet and worship him. The Tulasi wreathed Krishna, my lord protecting me from my forehead has risen to my head!
திருவாய்மொழி.99
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2889
பாசுரம்
உச்சியுள்ளேநிற்கும்தேவ தேவற்குக்கண்ணபிராற்கு,
இச்சையுள்செல்லவுணர்த்தி வண்குருகூர்ச்சடகோபன்,
இச்சொன்ன ஆயிரத்துள் இவையுமோர்பத்தெம்பிராற்கு,
நிச்சலும்விண்ணப்பம்செய்ய நீள்கழல்சென்னிபொருமே. 1.9.11
Summary
This decad of the thousand songs by Kurugur Satakopan addressing Krishna, Lord of gods, with love will abidingly secure his holy lotus feet to those who sing it to the Lord, with feeling.
திருவாய்மொழி.100
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2890
பாசுரம்
பொருமாநீள்படை யாழிசங்கத்தொடு,
திருமாநீள்கழல் ஏழுலகும்தொழ,
ஒருமாணிக்குற ளாகிநிமிர்ந்த, அக்
கருமாணிக்கமென் கண்ணுளதாகுமே. 1.10.1
Summary
I saw in my eyes the dark gem-hued Lord, resplendent with the war-waging discus and conch. He came as a manikin then and strode the Earth with great feet, O. How he grew and became worshipped by the seven worlds!
திருவாய்மொழி.101
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2891
பாசுரம்
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால்தொழில்,
எண்ணிலும்வரு மென்னினிவேண்டுவம்,
மண்ணும்நீரு மெரியும்நல்வாயுவும்,
விண்ணுமாய்விரியு மெம்பிரானையே. 1.10.2
Summary
My Lord unfolds himself as Earth, water, fire wind and sky. Whenever worship him with love, he enters into my eyes and fills my heart. What more do I want?
திருவாய்மொழி.102
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2892
பாசுரம்
எம்பிரானையெந்தை தந்தைதந்தைக்கும்
தம்பிரானை, தண்தாமரைக்கண்ணனை,
கொம்பராவு நுண்ணேரிடைமார்வனை,
எம்பிரானைத் தொழாய்மடநெஞ்சமே. 1.10.3
Summary
O Heart, wroship the cool lotus-eyed Lord! On his chest he bears the lotus-dame Lakshmi whose hips are slender like a snake or a twig. He is the Lord of my father, his father and the forefathers before him.
திருவாய்மொழி.103
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2893
பாசுரம்
நெஞ்சமேநல்லை நல்லை,உன்னைப்பெற்றால்
என்செய்யோம், இனியென்னகுறைவினம்?
மைந்தனை மலராள்மணவாளனை,
துஞ்சும்போதும் விடாதுதொடர்க்கண்டாய். 1.10.4
திருவாய்மொழி.104
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2894
பாசுரம்
கண்டாயேநெஞ்சே கருமங்கள்வாய்க்கின்று, ஓர்
எண்டானுமின்றியே வந்தியலுமாறு,
உண்டானையுலகேழு மோர்மூவடி
கொண்டானை, கண்டு கொண்டனைநீயுமே. 1.10.5
திருவாய்மொழி.105
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2895
பாசுரம்
நீயும்நானுமிந் நேர்நிற்கில், மேல்மற்றோர்,
நோயும்சார்க்கொடான் நெஞ்சமே, சொன்னேன்,
தாயும்தந்தையுமா யிவ்வுலகினில்,
வாயுமீசன் மணிவண்ணனெந்தையே. 1.10.6
திருவாய்மொழி.106
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2896
பாசுரம்
எந்தையேயென்று மெம்பெருமானென்றும்,
சிந்தையுள்வைப்பன் சொல்லுவன்பாவியேன்,
எந்தையெம்பெருமானென்று வானவர்,
சிந்தையுள் வைத்துச் சொல்லும்செல்வனையே. 1.10.7