Responsive image

பெரிய_திருமொழி

பெரிய திருமொழி.411

பாசுர எண்: 1358

பாசுரம்
தாம்தம் பெருமை யறியார், தூது
வேந்தர்க் காய வேந்த ரூர்போல்,
காந்தள் விரல்மென் கலைநன் மடவார்,
கூந்தல் கமழும் கூட லூரே (5.2.1)

பெரிய திருமொழி.412

பாசுர எண்: 1359

பாசுரம்
செறும்திண் திமிலே றுடைய, பின்னை
பெறும்தண் கோலம் பெற்றா ரூர்ப்போல்,
நறுந்தண் தீம் fதே னுண்ட வண்டு,
குறிஞ்சி பாடும் கூட லூரே (5.2.2)

பெரிய திருமொழி.413

பாசுர எண்: 1360

பாசுரம்
பிள்ளை யுருவாய்த் தயிருண்டு, அடியேன்
உள்ளம் புகுந்த வொருவ ரூர்போல்,
கள்ள நாரை வயலுள், கயல்மீன்
கொள்ளை கொள்ளும் கூட லூரே (5.2.3)

பெரிய திருமொழி.414

பாசுர எண்: 1361

பாசுரம்
கூற்றே ருருவின் குறளாய், நிலநீர்
ஏற்றா னெந்தை பெருமா னூர்போல்,
சேற்றே ருழுவர் கோதைப் போதூண்,
கோல்தேன் முரலும் கூட லூரே (5.2.4)

பெரிய திருமொழி.415

பாசுர எண்: 1362

பாசுரம்
தொண்டர் பரவச் சுடர்சென் றணவ,
அண்டத் தமரும் அடிக ளூர்போல்,
வண்ட லலையுள் கெண்டை மிளிர,
கொண்ட லதிரும் கூட லூரே (5.2.5)

பெரிய திருமொழி.416

பாசுர எண்: 1363

பாசுரம்
தக்கன் வேள்வி தகர்த்த தலைவன்,
துக்கம் துடைத்த துணைவ ரூர்போல்,
எக்க லிடுநுண் மணல்மேல், எங்கும்
கொக்கின் பழம்வீழ் கூட லூரே (5.2.6)

பெரிய திருமொழி.417

பாசுர எண்: 1364

பாசுரம்
கருந்தண் கடலும் மலையு முலகும்,
அருந்தும் அடிகள் அமரு மூர்போல்,
பெருந்தண் முல்லைப் பிள்ளை யோடி,
குருந்தம் தழுவும் கூட லூரே (5.2.7)

பெரிய திருமொழி.418

பாசுர எண்: 1365

பாசுரம்
கலைவாழ் பிணையோ டணையும், திருநீர்
மலைவா ழெந்தை மருவு மூர்போல்,
இலைதாழ் தெங்கின் மேல்நின்று, இளநீர்க்
குலைதாழ் கிடங்கின் கூட லூரே (5.2.8)

பெரிய திருமொழி.419

பாசுர எண்: 1366

பாசுரம்
பெருகு காத லடியேன் உள்ளம்,
உருகப் புகுந்த வொருவ ரூர்போல்,
அருகு கைதை மலர, கெண்டை
குருகென் றஞ்சும் கூட லூரே (5.2.9)

பெரிய திருமொழி.420

பாசுர எண்: 1367

பாசுரம்
காவிப் பெருநீர் வண்ணன், கண்ணன்
மேவித் திகழும் கூட லூர்மேல்,
கோவைத் தமிழால் கலியன் சொன்ன,
பாவைப் பாடப் பாவம் போமே (5.2.10)

Enter a number between 1 and 4000.