பெரிய_திருமொழி
பெரிய திருமொழி.431
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1378
பாசுரம்
உந்தி மேல்நான் முகனைப்
படைத்தான் உல குண்டவன்
எந்தை பெம்மான், இமையோர்கள்
தாதைக்கிட மென்பரால்,
சந்தி னோடு மணியும்
கொழிக்கும்புனல்f காவிரி,
அந்தி போலும் நிறத்தார்
வயல்சூழ்தென் னரங்கமே (5.4.1)
பெரிய திருமொழி.432
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1379
பாசுரம்
வையமுண் டாலிலை மேவு
மாயன்மணி நீண்முடி,
பைகொள் நாகத் தணையான்
பயிலுமிட மென்பரால்,
தையல் நல்லார் குழல்மா
லையும்மற்றவர் தடமுலை,
செய்ய சாந்தும் கலந்திழி
புனல்சூழ்தென் னரங்கமே (5.4.2)
பெரிய திருமொழி.433
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1380
பாசுரம்
பண்டிவ் வைய மளப்பான்
சென்றுமாவலி கையில்நீர்
கொண்ட ஆழித் தடக்கைக்
குறளனிட மென்பரால்,
வண்டு பாடும் மதுவார்
புனல்வந்திழி காவிரி
அண்ட நாறும் பொழில்சூழ்ந்து
அழகார்தென் னரங்கமே (5.4.3)
பெரிய திருமொழி.434
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1381
பாசுரம்
விளைத்த வெம்போர் விறல்வா
ளரக்கன்நகர் பாழ்பட,
வளைத்த வல்வில் தடக்கை
யவனுக்கிட மென்பரால்,
துளைக்கை யானை மருப்பு
மகிலும்கொணர்ந் துந்தி,முன்
திளைக்கும் செல்வப் புனல்கா
விரிசூழ்தென் னரங்கமே (5.4.4)
பெரிய திருமொழி.435
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1382
பாசுரம்
வம்புலாம் கூந்தல் மண்டோதரி
காதலன் வான்புக,
அம்பு தன்னால் முனிந்த
அழகனிட மென்பரால்,
உம்பர் கோனு முலகேழும்
வந்தீண்டி வணங்கும், நல்
செம்பொ னாரும் மதிள்சூழ்ந்து
அழகார்தென் னரங்கமே (5.4.5)
பெரிய திருமொழி.436
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1383
பாசுரம்
கலையு டுத்த அகலல்குல்
வன்பேய்மகள் தாயென,
முலைகொ டுத்தா ளுயிருண்
டவன்வாழுமிட மென்பரால்,
குலையெ டுத்த கதலிப்
பொழிலூடும் வந்துந்தி, முன்
அலையெ டுக்கும் புனற்கா
விரிசூழ்தென் னரங்கமே (5.4.6)
பெரிய திருமொழி.437
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1384
பாசுரம்
கஞ்சன் நெஞ்சும் கடுமல்
லரும்சகடமுங்காலினால்,
துஞ்ச வென்ற சுடராழி
யான்வாழுமிட மென்பரால்,
மஞ்சு சேர்மா ளிகைநீ
டகில்புகையும், மறையோர்
செஞ்சொல் வேள்விப் புகையும்
கமழும்தென் னரங்கமே (5.4.7)
பெரிய திருமொழி.438
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1385
பாசுரம்
ஏன மீனா மையோடு
அரியும்சிறு குறளுமாய்,
தானு மாயத் தரணித்
தலைவனிட மென்பரால்,
வானும் மண்ணும் நிறையப்
புகுந்தீண்டி வணங்கும்,நல்
தேனும் பாலும் கலந்தன்
னவர்சேர்த்தென் னரங்கமே (5.4.8)
பெரிய திருமொழி.439
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1386
பாசுரம்
சேய னென்றும் மிகப்பெரியன்
நுண்ணேர்மையி னாய,இம்
மாயையை ஆரு மறியா
வகையானிட மென்பரால்,
வேயின் முத்தும் மணியும்
கொணர்ந்தார்ப்புனற் காவிரி,
ஆய பொன்மா மதிள்சூழ்ந்
தழகார்தென் னரங்கமே (5.4.9)
பெரிய திருமொழி.440
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1387
பாசுரம்
அல்லி மாத ரமரும்
திருமார்வ னரங்கத்தை,
கல்லின் மன்னு மதிள்மங்
கையர்கோன்கலி கன்றிசொல்,
நல்லிசை மாலைகள் நாலி
ரண்டுமிரண் டுமுடன்,
வல்லவர் தாமுல காண்டு
பின்வானுல காள்வரே (5.4.10)