Responsive image

பெரிய_திருமொழி

பெரிய திருமொழி.501

பாசுர எண்: 1448

பாசுரம்
வண்டுணு நறுமல ரிண்டைகொண்டு
பண்டைநம் வினைகெட வென்று, அடிமேல்
தொண்டரு மமரும் பணியநின்று
அங்கண்டமொ டகலிட மளந்தவனே.
ஆண்டாயுனைக் கான்பதோ
ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே (6.1.1)

பெரிய திருமொழி.502

பாசுர எண்: 1449

பாசுரம்
அண்ணல்செய் தலைகடல் கடைந்ததனுள்
கண்ணுதல் நஞ்சுணக் கண்டவனே
விண்ணவ ரமுதுண அமுதில்வரும்
பெண்ணமு துண்டவெம் பெருமானே .
ஆண்டாயுனைக் காண்பதோ
ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே (6.1.2)

பெரிய திருமொழி.503

பாசுர எண்: 1450

பாசுரம்
குழல்நிற வண்ண நின் கூறுகொண்ட
தழல்நிற வண்ணன் நண் ணார்நகரம்
விழ, நனி மலைசிலை வளைவுசெய்துஅங்
கழல்நிற அம்பது வானவனே.
ஆண்டாயுன்னைக் காண்பதோ
ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே (6.1.3)

பெரிய திருமொழி.504

பாசுர எண்: 1451

பாசுரம்
நிலவொடு வெயில்நில விருசுடரும்
உலகமு முயிர்களு முண்டொருகால்,
கலைதரு குழவியி னுருவினையாய்
அலைகட லாலிலை வளர்ந்தவனே.
ஆண்டாயுனைக் காண்பதோ
ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே (6.1.4)

பெரிய திருமொழி.505

பாசுர எண்: 1452

பாசுரம்
பாரெழு கடலெழு மலையெழுமாய்ச்
சீர்கெழு மிவ்வுல கேழுமெல்லாம்,
ஆர்கெழு வயிற்றினி லடக்கி நின்று அங்
கோரெழுத் தோருரு வானவனே.
ஆண்டாயுனைக் காண்பதோ
ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே (6.1.5)

பெரிய திருமொழி.506

பாசுர எண்: 1453

பாசுரம்
கார்கெழு கடல்களும் மலைகளுமாய்
ஏர்கெழு முலகமு மாகி,முத
லார்களு மறிவரு நிலையினையாய்ச்
சீர்கெழு நான்மறை யானவனே.
ஆண்டாயுனைக் காண்பதோ
ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே (6.1.6)

பெரிய திருமொழி.507

பாசுர எண்: 1454

பாசுரம்
உருக்குறு நறுநெய்கொண் டாரழலில்
இறுக்குறு மந்தணர் சந்தியின்வாய்,
பெருக்கமொ டமரர்க ளமரநல்கும்
இருக்கினி லின்னிசை யானவனே.
ஆண்டாயுனைக் காண்பதோ
ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே (6.1.7)

பெரிய திருமொழி.508

பாசுர எண்: 1455

பாசுரம்
காதல்செய் திளையவர் கலவிதரும்
வேதனை வினையது வெருவுதலாம்,
ஆதலி னுனதடி யணுகுவன் நான்.
போதலார் நெடுமுடிப் புண்ணியனே.
ஆண்டாயுனைக் காண்பதோ
ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே (6.1.8)

பெரிய திருமொழி.509

பாசுர எண்: 1456

பாசுரம்
சாதலும் பிறத்தலு மென்றிவற்றைக்
காதல்செய் யாதுன கழலடைந்தேன்,
ஓதல்செய் நான்மறை யாகியும்பர்
ஆதல்செய் மூவுரு வானவனே.,
ஆண்டாய் உனைக் காண்பதோ
ரருளெனக் கருளுதியேல்
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே. (6.1.9)

பெரிய திருமொழி.510

பாசுர எண்: 1457

பாசுரம்
பூமரு பொழிலணி விண்ணகர்மேல்,
காமரு சீர்க்கலி கன்றிசொன்ன,
பாமரு தமிழிவை பாடவல்லார்,
வாமனன் அடியிணை மருவுவரே
(6.1.10)

Enter a number between 1 and 4000.