பெரிய_திருமொழி
பெரிய திருமொழி.521
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1468
பாசுரம்
துறப்பேன் அல்லேனின் பம்துற
வாது, நின்னுருவம்
மறப்பே னல்லேனென் றும்மற
வாது, யானுலகில்
பிறப்பே னாகவெண் ணேன்பிற
வாமை பெற்றது, நின்
திறத்தே னாதன் மையால்
திருவிண் ணகரானே (6.3.1)
பெரிய திருமொழி.522
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1469
பாசுரம்
துறந்தே னார்வச் செற்றச்சுற்
றம்து றந்தமையால்,
சிறந்தேன் நின்னடிக்கே
யடிமை திருமாலே,
அறந்தா னாய்த்திரி வாய் உன்
னையென் மனத்தகத்தே,
திறம்பா மல்கொண் டேன்திரு
விண்ணகரானே (6.3.2)
பெரிய திருமொழி.523
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1470
பாசுரம்
மானேய் நோக்குநல்லார்
மதிபோல்முகத்துலவும்,
ஊனேய் கண்வாளிக் குடைந்தோட்
டந்துன் னடைந்தேன்,
கோனே குறுங்குடியுள்
குழகா திருநறையூர்த்
தேனே, வருபுனல்சூழ்
திருவிண் ணகரானே (6.3.3)
பெரிய திருமொழி.524
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1471
பாசுரம்
சாந்தேந்து மென்முலை யார்தடந்
தோள்புண ரின்பவெள்ளத்
தாழ்ந்தேன், அருநகரத்
தழுந்தும் பயன்படைத்தேன்,
போந்தேன், புண்ணியனே.
உனையெய்தியென் தீவினைகள்
தீர்ந்தேன், நின்னடைந்தேன்
திருவிண் ணகரானே (6.3.4)
பெரிய திருமொழி.525
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1472
பாசுரம்
மற்றோர் தெய்வமெண்ணே
னுன்னையென் மனத்துவைத்துப்
பெற்றேன், பெற்றதுவும்
பிறவாமை யெம்பெருமான்,
வற்றா நீள்கடல்சூ
ழிலங்கையி ராவணனைச்
செற்றாய், கொற்றவனே.
திருவிண் ணகரானே (6.3.5)
பெரிய திருமொழி.526
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1473
பாசுரம்
மையொண் கருங்கடலும்
நிலனு மணிவரையும்,
செய்ய சுடரிரண்டும்
இவையாய நின்னை, நெஞ்சில்
உய்யும் வகையுணர்ந்தே
_ண்மையாலினி யாது மற்றோர்
தெய்வம் பிறிதறியேன்
திருவிண் ணகரானே (6.3.6)
பெரிய திருமொழி.527
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1474
பாசுரம்
வேறே கூறுவதுண்
டடியேன் விரித்துரைக்கு
மாறே, நீபணியா
தடைநின் திருமனத்து,
கூறேன் நெஞ்சுதன்னால்
குணங்கொண்டு மற் றோர்தெய்வம்
தேறே னுன்னையல்லால்
திருவிண் ணகரானே (6.3.7)
பெரிய திருமொழி.528
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1475
பாசுரம்
முளிதீந்த வேங்கடத்து
மூரிப்பெ ருங்களிற்றால்,
விளிதீந்த மாமரம்போல்
வீழ்ந்தாரை நினையாதே
அளிந்தோர்ந்த சிந்தைநின்பா,
லடியேற்க்கு, வானுலகம்
தெளிந்தேயென் றெய்துவது?
திருவிண் ணகரானே (6.3.8)
பெரிய திருமொழி.529
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1476
பாசுரம்
சொல்லாய் திருமார்வா
உனக்காகித் தொண்டுபட்ட
நல்லே னை வினைகள்
நலியாமை நம்புநம்பீ,
மல்லாகுடமாடி.
மதுசூத னே உலகில்
செல்லா நல்லிசையாய்
திருவிண் ணகரானே (6.3.9)
பெரிய திருமொழி.530
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1477
பாசுரம்
தாரார் மலர்க்கமலத்
தடஞ்சூழ்ந்த தண்புறவில்,
சீரார் நெடுமறுகில்
திருவிண் ணகரானை
காரார் புயல்தடக்கைக்
கலிய னொலிமாலை,
ஆரா ரிவைவல்லார்
அவர்க்கல்லல் நில்லாவே (6.3.10)