பெரிய_திருமொழி
பெரிய திருமொழி.531
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1478
பாசுரம்
கண்ணும் சுழன்று பீளையோ
டீளைவந் தேங்கினால்,
பண்ணின் மொழியார் பைய
நடமின் என் னாதமுன்,
விண்ணும் மலையும் வேதமும்
வேள்வியு மாயினான்,
நண்ணு நறையூர் நாம்தொழு
தும்மெழு நெஞ்சமே (6.4.1)
பெரிய திருமொழி.532
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1479
பாசுரம்
கொங்குண் குழலார் கூடி
யிருந்து சிரித்து, நீர்
இங்கென்னிருமி யெம்பால்
வந்ததென் றிகழாதமுன்,
திங்க ளெரிகால் செஞ்சுட
ராயவன் தேசுடை
நங்கள் நறையூர் நாம்தொழு
தும்மெழு நெஞ்சமே (6.4.2)
பெரிய திருமொழி.533
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1480
பாசுரம்
கொங்கார் குழலார் கூடி
யிருந்து, சிரித்து, எம்மை
எங்கோலம் ஐயா என்னினிக்
காண்பதென் னாதமுன்
செங்கோல் வலவன் தான்பணிந்
தேத்தித் திகழுமூர்,
நங்கோன் நறையூர் நாம்தொழு
தும்மெழு நெஞ்சமே (6.4.3)
பெரிய திருமொழி.534
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1481
பாசுரம்
கொம்பும் அரவமும் வல்லியும்
வெண்றனுண் ணேரிடை,
வம்புண் குழலார் வாச
லடைத்திக ழாதமுன்,
செம்பொன் கமுகினந் தான்கனி
யும்செழுஞ் சோலைசூழ்
நம்பன் நறையூர் நாம்தொழு
தும்மெழு நெஞ்சமே (6.4.4)
பெரிய திருமொழி.535
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1482
பாசுரம்
விலங்கும் கயலும் வேலுமொண்
காவியும் வெண்றகண்
சலம்கொண்ட சொல்லார் தாங்கள்
சிரித்திக ழாதமுன்,
மலங்கும் வராலும் வாளையும்
பாய்வயல் சூழ்தரு,
நலங்கொள் நறையூர் நாம்தொழு
தும்மெழு நெஞ்சமே (6.4.5)
பெரிய திருமொழி.536
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1483
பாசுரம்
மின்னே ரிடையார் வேட்கையை
மாற்றி யிருந்து,
என்னீ ரிருமியெம் பால்வந்த
தென்றிக ழாதமுன்,
தொன்னீ ரிலங்கை மலங்க
இலங்கெரி யூட்டினான்,
நன்னீர் நறையூர் நாம்தொழு
தும்மெழு நெஞ்சமே (6.4.6)
பெரிய திருமொழி.537
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1484
பாசுரம்
வில்லேர் நுதலார் வேட்கையை
மாற்றிச் சிரித்து, இவன்
பொல்லான் திரைந்தான் என்னும்
புறனுரை கேட்பதன்முன்,
சொல்லார் மறைநான் கோதி
யுலகில் நிலாயவர்,
நல்லார் நறையூர் நாம்தொழு
தும்மெழு நெஞ்சமே (6.4.7)
பெரிய திருமொழி.538
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1485
பாசுரம்
வாளொண்கண் ணல்லார் தாங்கள்
மதனனென் றார்தம்மை,
கேளுமின் களீலையோடு ஏங்கு
கிழவன் என் னாதமுன்,
வேள்வும் விழவும் வீதியி
லென்று மறாதவூர்,
நாளு நறையூர் நாம்தொழு
தும்மெழு நெஞ்சமே (6.4.8)
பெரிய திருமொழி.539
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1486
பாசுரம்
கனிசேர்ந் திலங்குநல் வாயவர்
காதன்மை விட்டிட,
குனிசேர்ந் துடலம் கோலில்
த்ளர்ந்திளை யாதமுன்,
பனிசேர் விசும்பில் பான்மதி
கோள்விடுத் தானிடம்,
நனிசேர் நறையூர் நாம்தொழு
தும்மெழு நெஞ்சமே (6.4.9)