பெரிய_திருமொழி
பெரிய திருமொழி.561
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1508
பாசுரம்
ஆளும் பணியு மடியேனைக்
கொண்டான் விண்ட நிசாசரரை
தோளும் தலையும் துணிவெய்தச்
சுடுவெஞ் சிலைவாய்ச் சரந்துரந்தான்
வேளும் சேயு மனையாரும்
வேற்க ணாரும் பயில்வீதி
நாளும் விழவி னொலியோவா
நறையூர் நின்ற நம்பியே (6.7.1)
பெரிய திருமொழி.562
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1509
பாசுரம்
முனியாய் வந்து மூவெழுகால்
முடிசேர் மன்ன ருடல்துணிய
தனிவாய் மழுவின் படையாண்ட
தாரார் தோளான், வார்புறவில்
பனிசேர் முல்லை பல்லரும்பப்
பான லொருபால் கண்காட்ட
நனிசேர் கமலம் முகங்காட்டும்
நறையூர் நின்ற நம்பியே (6.7.2)
பெரிய திருமொழி.563
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1510
பாசுரம்
தெள்ளார் கடல்வாய் விடவாய
சினவா ளரவில் துயிலமர்ந்து
துள்ளா வருமான் விழவாளி
துரந்தா னிரந்தான் மாவலிமண்
புள்ளார் புறவில் பூங்காவி
புலங்கொள் மாதர் கண்காட்ட
நள்ளார் கமலம் முகங்காட்டும்
நறையூர் நின்ற நம்பியே (6.7.3)
பெரிய திருமொழி.564
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1511
பாசுரம்
ஓளியா வெண்ணெ யுண்டானென்
றுரலோ டாய்ச்சி யொண்கயிற்றால்
விளியா ஆர்க்க ஆப்புண்டு
விம்மி யழுதான் மென்மலர்மேல்
களியா வண்டு கள்ளுண்ணக்
காமர் தென்றல் அலர்தூற்ற
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும்
நறையூர் நின்ற நம்பியே (6.7.4)
பெரிய திருமொழி.565
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1512
பாசுரம்
வில்லார் விழவில் வடமதுரை
விரும்பி விரும்பா மல்லடர்த்து
கல்லார் திரடோள் கஞ்சனைக்
காய்ந்தான் பாய்ந்தான் காளியன்மேல்
சொல்லார் சுருதி முறையோதிச்
சோமுச் செய்யும் தொழிலினோர்
நல்லார் மறையோர் பலர்வாழும்
நறையூர் நின்ற நம்பியே (6.7.5)
பெரிய திருமொழி.566
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1513
பாசுரம்
வள்ளி கொழுநன் முதலாய
மக்க ளோடு முக்கண்ணான்
வெள்கி யோட விறல்வாணன்
வியன்தோள் வனத்தைத் துணித்துகந்தான்
பள்ளி கமலத் திடைப்பட்ட
பகுவா யலவன் முகம்நோக்கி
நள்ளியூடும் வயல்சூழ்ந்த
நறையூர் நின்ற நம்பியே (6.7.6)
பெரிய திருமொழி.567
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1514
பாசுரம்
மிடையா வந்த வேல்மன்னர்
வீய விசயன் தேர்கடவி,
குடையா வரையொன் றெடுத்தாயர்
கோவாய் நின்றான் கூராழிப்
படையான் வேதம் நான்கைந்து
வேள்வி யங்க மாறிசையேழ்
நடையா வல்ல அந்தணர்வாழ்
நறையூர் நின்ற நம்பியே (6.7.7)
பெரிய திருமொழி.568
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1515
பாசுரம்
பந்தார் விரலாள் பாஞ்சாலி
கூந்தல் முடிக்கப் பாரதத்து
கந்தார் களிற்றுக் கழல்மன்னர்
கலங்கச் சங்கம் வாய்வைத்தான்
செந்தா மரைமே லயனோடு
சிவனு மனைய பெருமையோர்
நந்தா வண்கை மறையோர் வாழ்
நறையூர் நின்ற நம்பியே (6.7.8)
பெரிய திருமொழி.569
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1516
பாசுரம்
ஆறும் பிறையும் அரவமும்
அடம்பும் சடைமே லணிந்து,உடலம்
நீறும் பூசி யேறூரும்
இறையோன் சென்று குறையிரப்ப
மாறொன் றில்லா வாசநீர்
வரைமார் வகலத் தளித்துகந்தான்
நாறும் பொழில்சூழ்ந் தழகாய
நறையூர் நின்ற நம்பியே (6.7.9)
பெரிய திருமொழி.570
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1517
பாசுரம்
நன்மை யுடைய மறையோர்வாழ்
நறையூர் நின்ற நம்பியை
கன்னி மதில்சூழ் வயல்மங்கைக்
கலிய னொலிசெய் தமிழ்மாலை
பன்னி யுலகில் பாடுவார்
பாடு சார பழவினைகள்
மன்னி யுலகம் ஆண்டுபோய்
வானோர் வணங்க வாழ்வாரே (6.7.10)