பெரிய_திருமொழி
பெரிய திருமொழி.571
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1518
பாசுரம்
மான்கொண்ட தோல்மார்வில் மாணியாய், மாவலிமண்
தான்கொண்டு தாளால் அளந்த பெருமானை
தேன்கொண்ட சாரல் திருவேங் கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே (6.8.1)
பெரிய திருமொழி.572
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1519
பாசுரம்
முந்நீரை முன்னாள் கடைந்தானை மூழ்த்தநாள்
அந்நீரை மீனா யமைத்த பெருமானை
தென்னாலி மேய திருமாலை யெம்மானை
நன்னீர் வயல்சூழ் நறையூரில் கண்டே னே (6.8.2)
பெரிய திருமொழி.573
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1520
பாசுரம்
தூவாய புள்ளூர்ந்து, வந்து துறைவேழம்
மூவாமை நல்கி முதலை துணித்தானை
தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை
நாவாயு ளானை நறையூரில் கண்டேனே (6.8.3)
பெரிய திருமொழி.574
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1521
பாசுரம்
ஓடாவரியாய் இரணியனை யூனிடந்த
சேடார் பொழில்சூழ் திருநீர் மலையானை
வாடா மலர்த்துழாய் மாலை முடியானை
நாடோறும் நாடி நறையூரில் கண்டேனே (6.8.4)
பெரிய திருமொழி.575
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1522
பாசுரம்
கல்லார் மதில்சூழ் கடியிலங்கைக் காரரக்கன்
வல்லாகங் கீள வரிவெஞ் சரம்துரந்த
வில்லானை, செல்வவிபீடணற்கு வேறாக
நல்லனை நாடி நறையூரில் கண்டேனே (6.8.5)
பெரிய திருமொழி.576
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1523
பாசுரம்
உம்பருலகோடு உயிரெல்லாம் உந்தியில்
வம்பு மலர்மேல் படைத்தானை மாயோனை
அம்பன்ன கண்ணாள் அசோதைதன் சிங்கத்தை
நம்பனை நாடி நறையூரில் கண்டேனே (6.8.6)
பெரிய திருமொழி.577
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1524
பாசுரம்
கட்டேறு நீள்சோலைக் காண்டவத்தைத் தீமூட்டி
விட்டானை மெய்யம் அமர்ந்த பெருமானை
மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண்துவரை
நட்டானை நாடி நறையூரில் கண்டேனே (6.8.7)
பெரிய திருமொழி.578
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1525
பாசுரம்
மண்ணின்மீ பாரங் கெடுப்பான் மறமன்னர்
பண்ணின்மேல் வந்த படையெல்லாம் பாரதத்து
விண்ணின்மீ தேற விசயன்தே ரூர்ந்தானை
நண்ணிநான் நாடி நறையூரில் கண்டேனே (6.8.8)
பெரிய திருமொழி.579
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1526
பாசுரம்
பொங்கேறு நீள்சோதிப் பொன்னாழி தன்னோடும்
சங்கேறு கோலத் தடக்கைப் பெருமானை
கொங்கேறு சோலைக் குடந்தைக் கிடந்தானை
நங்கோனை நாடி நறையூரில் கண்டேனே (6.8.9)
பெரிய திருமொழி.580
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1527
பாசுரம்
மன்னு மதுரை வசுதேவர் வாழ்முதலை
நன்னறையூர் நின்ற நம்பியை வம்பவிழ்தார்
கன்னவிலும் தோளான் கலிய னொலிவல்லார்
பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே (6.8.10)