Responsive image

பெரிய_திருமொழி

பெரிய திருமொழி.601

பாசுர எண்: 1548

பாசுரம்
கறவா மடநாகுதன் கன்றுள்ளி னாற்போல்,
மறவா தடியே னுன்னையே யழைக்கின்றேன்,
நறவார் பொழில்சூழ் நறையூர் நின்ற நம்பி,
பிறவாமை யெனைப்பணி யெந்தை பிரானே. (2) 7.1.1

பெரிய திருமொழி.602

பாசுர எண்: 1549

பாசுரம்
வற்றா முதுநீரொடு மால்வரை யேழும்,
துற்றா முன்துற்றிய தொல்புக ழோனே,
அற்றே னடியே னுன்னையே யழைக்கின்றேன்,
பெற்றே னருள்தந்திடு என் எந்தை பிரானே. 7.1.2

பெரிய திருமொழி.603

பாசுர எண்: 1550

பாசுரம்
தாரேன் பிறர்க்குன் னருளென் னிடைவைத்தாய்,
ஆரே னதுவே பருகிக் களிக்கின்றேன்,
காரேய் கடலே மலையே திருக்கோட்டி
யூரே, உகந்தா யையுகந் தடியேனே 7.1.3

பெரிய திருமொழி.604

பாசுர எண்: 1551

பாசுரம்
புள்வாய் பிளந்த புனிதா என் றழைக்க,
உள்ளேநின் றென்னுள்ளங் குளிரு மொருவா,
கள்வா கடன்மல்லைக் கிடந்த கரும்பே,
வள்ளால் உன்னை யெங்ஙனம்நான் மறக்கேனே 7.1.4

பெரிய திருமொழி.605

பாசுர எண்: 1552

பாசுரம்
வில்லேர் நுதல்வேல் நெடுங்கண் ணியும்நீயும்,
கல்லார் கடுங்கானம் திரிந்த களிறே,
நல்லாய் நரநா ரணனே எங்கள்நம்பி,
சொல்லா யுன்னையான் வணங்கித் தொழுமாறே 7.1.5

பெரிய திருமொழி.606

பாசுர எண்: 1553

பாசுரம்
பணியேய் பரங்குன்றின் பவளத் திரளே,
முனியே திருமூழிக் களத்து விளக்கே,
இனியாய் தொண்டரோம் பருகின் னமுதாய
கனியே உன்னைக்கண்டு கொண்டுய்ந் தொழிந்தேனே 7.1.6

பெரிய திருமொழி.607

பாசுர எண்: 1554

பாசுரம்
கதியே லில்லைநின் னருளல் லதெனக்கு,
நிதியே. திருநீர் மலைநித் திலத்தொத்தே,
பதியே பரவித் தொழும்தொண் டர்தமக்குக்
கதியே உனைக்கண்டு கொண்டுய்ந் தொழிந்தேனே 7.1.7

பெரிய திருமொழி.608

பாசுர எண்: 1555

பாசுரம்
அத்தா அரியே என்றுன் னையழைக்க,
பித்தா வென்று பேசுகின்றார் பிறரென்னை,
முத்தே மணிமா ணிக்கமே முளைக்கின்ற
வித்தே உன்னைஎங் ஙனம்னான் விடுகேனே. 7.1.8

பெரிய திருமொழி.609

பாசுர எண்: 1556

பாசுரம்
தூயாய். சுடர்மா மதிபோ லுயிர்க்கெல்லாம்,
தாயாய் அளிக்கின்ற தண்டா மரைக்கண்ணா,
ஆயா அலைநீ ருலகேழும் முன்னுண்ட
வாயா உனையெங் ஙனம்நான் மறக்கேனே 7.1.9

பெரிய திருமொழி.610

பாசுர எண்: 1557

பாசுரம்
வண்டார் பொழில்சூழ் நறையூர்நம் பிக்கு,என்றும்
தொண்டாய்க் கலிய நொலிசெய் தமிழ்மாலை,
தொண்டீர் இவைபாடு மின்பாடி நின்றாட,
உண்டே விசும்பு உந்தமக்கில் லைதுயரே (2) 7.1.10

Enter a number between 1 and 4000.